புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து வேண்டுதல்களை செலுத்தினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவும் அதனைத் தொடர்ந்து மாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோன்று இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டு களை ஏந்தி வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தாங்கள் எடுத்து வந்த பூக்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.
கோயில் முன்பாக பொதுமக்கள் மாவிளக்கு போட்டு விளக்குகள் ஏற்றியும், தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இதுபோன்று காமராஜபுரம் தொகுதியிலிருந்து யானை ஊர்வலத்துடன் செண்டை மேளம் முழங்க பூத் தட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டன