தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நமது நாட்டில் உடுருவிய கொரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து, ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. லட்சக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் பிழைத்தனர். பின்னர், பல்வே தடுப்பு நடவடிக்கைக்கு பின் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தவேளையில், இந்தாண்டு மார்ச் மாதம் துவங்கியதும், கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியது. தினமும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதைதொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து துறை அதிகாரிகளும், பணிசுமையில் இருந்தனர். இதனால், கொரோனா பரவல் குறித்த எவ்வித அறிக்கையும் தெரிவிக்கவில்லை. நேற்று தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, இன்று அனைத்து மாநில சுகாதார துறை செயலாளர் கூட்டம் நடக்க உள்ளது. அதில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கவும், தளர்வுகள் அறிவிக்கவும் மத்திய அரசு உத்தரவிடும் என தெரிகிறது. இதைதொடர்ந்து, நாளை முதல தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் எனவும் தெரிகிறது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்? – நாளை அறிவிப்பு வெளியாகிறது

Spread the love