கள்ளகாதலியின் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கரம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் பகுதியை சார்ந்தவர் அலெக்ஸ் (வயது 24). இவருக்கும், அதே பகுதியை சார்ந்த இளம்பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்த பெண்மணிக்கு திருமணம் முடிந்து 5 வயது மற்றும் 3 வயது என இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. அவர் இருவரையும் எச்சரித்தும் பலனில்லை. இதனையடுத்து, பெண்மணி தனது முதல் குழந்தையுடன் கள்ளக்காதலன் அலெக்ஸை அழைத்துக்கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா சதுப்பு பகுதியில் குடியேறியுள்ளனர். இளம்பெண் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில், அலெக்ஸ் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாக கிடந்துள்ளான்.
இந்நிலையில், சம்பவத்தன்று பெண்மணி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகையில், அவரது 5 வயது மகன் உடலில் காயத்துடன் மயங்கி இருந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய் தனது குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவர்களின் சோதனையில் பச்சிளம் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதும், உடலில் நகக்கீறல் மற்றும் பற்களால் கொடூரமாக கடித்த தடமும் இருந்துள்ளது.
மேலும், சிறிது நேரத்திலேயே சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக கும்பளா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அலெக்ஸை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், மது மற்றும் கஞ்சா போதையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை காமுகன் ஒப்புக்கொண்டுள்ளான். இதனையடுத்து அலெக்ஸை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.