Spread the love
வடகொரியாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை அந்நாட்டு சுகாதாரத்துறை உலக சுகாதாரத்துறை நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது.
பியோங்யாங் : கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை வடகொரியா மறைத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டிய நிலையில் வடகொரியா அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் இருந்து 23,121 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு கண்டறியப்படவில்லை எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.